ஆகஸ்ட் 10, 2009

மரணம்


என்னையே ...நீ
நிழலாகச் சுற்றி வந்தாய்
நான் ...
வாழ்ந்தபோது .

நீ ,
எனக்குள் நுழைந்தபோது
நான் ...
வெறும் நிழலாகிப் போனேன் .

ஆம்
நீ ...
நிழலாக இருந்தபோது
நான் வாழ்ந்தேன் .
இன்று
நான் ...
நிழலாக கிடப்பதால்
நீ
வாழ்கிறாய் "மரணமே" !

11 கருத்துகள்:

கண்ணன் சொன்னது…

நான்" "நீ" "நிழல்" "மரணம்" - எளிமையான ஒப்பிடு
மரணத்தை பற்றிய புரிதலும்
கவிதையும் அருமை

துபாய் ராஜா சொன்னது…

மரணத்தைப்பற்றிய சிறுகுறிப்பு அருமை.

//என்னையே ...நீ
நிழலாகச் சுற்றி வந்தாய்
நான் ...
வாழ்ந்தபோது//

//நீ ...
நிழலாக இருந்தபோது
நான் வாழ்ந்தேன் .
இன்று
நான் ...
நிழலாக கிடப்பதால்
நீ
வாழ்கிறாய் "மரணமே" !//

சிறப்பான வரிகள்.வாழ்த்துக்கள்.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க கண்ணன்.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு நன்றிங்க துபாய் ராசா.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//ஆம்
நீ ...
நிழலாக இருந்தபோது
நான் வாழ்ந்தேன் .
இன்று
நான் ...
நிழலாக கிடப்பதால்
நீ
வாழ்கிறாய் "மரணமே" !//


நல்ல ஒப்பீடு நல்ல வார்த்தையாடல்
நல்லாயிருக்கு நண்பா..

Kala சொன்னது…

எம்முடன் இருக்கும் எதுவும்
நிலையில்லாதது இருக்கும்
வரைதான் எல்லா ஆட்டங்களும்
நிழலாடுகிறது என் மனதில்
உங்கள் கவிதை .

Kala சொன்னது…

எம்முடன் இருக்கும் எதுவும்
நிலையில்லாதது இருக்கும்
வரைதான் எல்லா ஆட்டங்களும்
நிழலாடுகிறது என் மனதில்
உங்கள் கவிதை .

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றி திரு ஞானசேகரன்.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரையில் கவிதை சொல்லும் கலாவிர்கு மிக்க நன்றி.

ஹேமா சொன்னது…

கருணாகரசு,நிறைய நாளாக மரணம் என்கிற தலைப்பில் கவிதை ஒன்று எழுதனும்ன்னு நினைக்கிறேன்.ஏனோ ஒரு சிந்தனைப் பயம்.சரியா என்கிறதுபோல.உங்கள் கவிதை வரிகள் உற்சாகம் தந்திருக்கு.இனி எழுதுவேன்.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமா, என்கவிதை வரிகள் உங்களை "மரண கவிதை"யா எழுத தூண்டனும்... என்ன இருந்தாலும் படைப்பு அவசியம் தானே எழுதுங்கோ எழுதுங்கோ. வலியோ,மகிழ்வோ பதிவு செய்திட வேண்டும். உடனே எழுதுங்கள் அப்போதுதான் அந்த கவிதை உணர்வைத்தாங்கி வரும்.நன்றி.

Related Posts with Thumbnails