ஆறுதல்படுத்தும்
மகிழ்ச்சிக் கேடயம்,
மரப்பாச்சி பொம்மைகள்.
அது... வீடுகளில்
திண்ணைகள் இருந்த காலம்.காடுச்செல்லும் அம்மாக்கள்,
குழந்தையை மரப்பாச்சியிடமும்
மரப்பாச்சியைக் குழந்தையிடமும்
விட்டுச்செல்வதில்தான் நம்பிக்கை.
தாழ்வாரம்
பூவரச மரநிழல்
மாட்டுக் கொட்டகை
திண்ணை... இவைகள்தான்
மரப்பாச்சியோடு எங்கள்
மழலைகள் விளையாடும்
மகிழ்வரங்கம்.
மரப்பாச்சியை
பொய்யாய்க் குளிப்பாட்டி
தலைவாரிப் பூச்சூடி
உணவூட்டி உறங்கவைக்கும்
குழந்தைகளுக்கு,
அறவே வருவதில்லை
அம்மா நினைவும்
அந்த வேளை பசியும்.
இன்று தெருக்களில்
சீனபொம்மைகளை
கூவி விற்பதை கேட்கையில்,
கைகால் உடைந்த
மரப்பாச்சி பொம்மையாய்
மனம் வலிக்கிறது.
ஏனெனில்,
இவைகளே அன்றைய...
குழந்தைகளின் குழந்தை!.
.
| Tweet |

