முதல் நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல் நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நவம்பர் 07, 2009

தேடலைச்சுவாசி

தேடல்
உன்
முகாரிக்கு முடிவுரையும்
பூபாளத்திற்கு வாழ்த்துரையும்
எழுதுமோர் ...
சிறகுச் சித்தாந்தம் .

இது
சுயமேம்பாட்டின்
சுருக்கெழுத்து .
வானத்தையே விலைபேசும்
வசீகர மந்திரம் .

தேடலே ...
நித்தம் உன்னை
புதிதாய்ச் செதுக்கும்
வைர உளி .
இருட்டிலும் உன்னை
ஒளிரச் செய்யும்
சூரிய வெளிச்சம் .

தேடல்
உன்
முன்னேற்றத்தை
முகவரியாய் எழுதும்.
முகத்தைப்
பொன்னேட்டில் வரையும் .

தேடல்
விடியலைக் கற்பிக்கும்
வியர்வைப் பாடம் .
வெற்றிக் கனி பறிக்க
வித்திடும் ஏணி .

தேடலினால்
சிகரங்கள்
உன்னிடம்
கைகுலுக்கும் .
தேசங்கள்
உன்னை மொழிபெயர்க்கும் .

தேடல்
வாழ்வின் பிடிப்பு
வசந்தத்தின் அழைப்பு
இது ,
என்றும் உன்னை
இளமையாய் வைத்திருக்கும்
சுவை மருந்து - இதை
தினம் அருந்து.

தேடலை என்றும் சுவாசி !
தேசத்தில் நீதான் சுகவாசி !!

(இது எனது முதல் இலட்சிய படைப்பான "தேடலைச்சுவாசி" நூலிலிருந்து.... )
( வெளியிட்ட‌ ஆண்டு.2004 சூலை )
Related Posts with Thumbnails