மஞ்சள் பூசிக் குளி
என்கிறாள் அம்மா,
உன்னைப் பூசிக் குளிப்பேன்
என்கிறது மஞ்சள்.
என்னதான்
குடைப்பிடித்திருந்தாலும்
உன்னை
தீண்டி மகிழ்கின்றன- சில
திருட்டு மழைத்துளிகள்.
ஒற்றுப் பிழையால்கூட
அழகாகிவிடுகிறது
ஓர்க் கவிதை!
உன்
தெத்துபல் போல.
என்
காதலென்ற கொடும்பசிக்கு
பெருந் தீனியாகிவிடுகிறது
உன்
முத்தப் பருக்கைகள்.