ஜூலை 11, 2009

போருக்குப்பின்...

அந்த இடிந்த வீட்டை
சுற்றிச் சுற்றி வந்தது .
*
முறிந்து கிடந்த கட்டிலை
முகர்ந்து பார்த்தது .
*
பின்
வாசலில் நின்று
உள்ளே பார்த்து குறைத்தது .
*
இப்போது ,
வீட்டோரமாய்
படுத்துக் கிடக்கிறது .
*
தன்னைப் போல்
அவர்களும் ...
திரும்புவார்கள் என்று !
*
அந்த,
நாய்க்குட்டிக்கு சொல்வதெப்படி
நாடறிந்த உண்மையை ?.

5 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//அந்த,
நாய்க்குட்டிக்கு சொல்வதெப்படி
நாடறிந்த உண்மையை ?.//

ஆகா.....அருமை நண்பா

சி.கருணாகரசு சொன்னது…

உங்களைப் போன்றோர்களின் கருத்துரைத்தான்...இதுபோன்ற வலிகளை பதிவுச் செய்ய உந்து சக்தியாக இருக்கிறது. கருத்துரைக்கு மிக்க நன்றி... திரு ஆ.ஞானசேகரன்.

அன்புடன் அருணா சொன்னது…

//அந்த,
நாய்க்குட்டிக்கு சொல்வதெப்படி
நாடறிந்த உண்மையை ?.//
சொல்லாமல் விட்டுவிடுங்க.
நாய்க்குட்டி நிம்மதியாக இருக்கட்டும்.

சி.கருணாகரசு சொன்னது…

அந்த நாய் குட்டிக்கு நிச்சயம்மாக‌ சொல்லமாட்டேன் அருணா. கருத்துரைக்கு மிக்க நன்றி

arasan சொன்னது…

மாமா உங்களின் வரிகள்... மிக அருமை...

வலிகொண்ட இதயத்தின் வலியை இதயமே இல்லாதவன் எப்படி அறிவான்...

Related Posts with Thumbnails