செப்டம்பர் 24, 2011

பாரதி நினைவரங்கம் (காணொளி)

வணக்கம்....

பாரதி 126 நினைவரங்கில் பாரதி என்னும் பொதுத்தலைபில் "பாரதியின் பராசக்தி" என்று நான் வாசித்த கவிதை.
இடம்... உமறுப் புலவர் தமிழ்மொழி கல்வி நிலையம் , சிங்கப்பூர். (2008)


செப்டம்பர் 12, 2011

பிறந்த நாள்

வணக்கம்,

இன்று (12-09-2011) என் மகன் சி.க.இளங்கதிர் க்கு முதலாண்டு பிறந்த நாள்.


              முதல் “மாத” பிறந்தநாளின் போது.
       ஆறாம் “மாத” பிறந்தநாளின் போது (அரை வயது)

பிறந்த நாள் கொண்டாடுவதில் உடன்பாடில்லாத நான் ... தேடலின் காரணமாக வெளிநாட்டில் இருப்பதால், உருவாக்கிக் கொண்ட மகிழ்ச்சி தருணங்கள் இவை.




முதலாண்டு பிறந்த நாளுக்கு தயாராகிறான் சி.க இளங்கதிர்

            

ஆகஸ்ட் 30, 2011

யார் குற்றவாளி (காணொளி)

வணக்கம்....

செங்கொடி மரணத்தை தாழ்வுபடுத்தாதீர்கள்.
அவர் போல் யாரும் தழலில் சிக்காதீர்கள்.



இந்த காணொளியில்  நம் நாட்டு புலனாய்வு திறனை காணலாம்.
தமிழர்களின் “ஒன்றினையாமை”யால் என்ன நிகழ்ந்துள்ளது என்பதையும் உணருங்கள். நன்றி



நன்றி... குமுதம்.காம்


ஆகஸ்ட் 19, 2011

நெருப்பில் நிலவு

                                     


                                         (வெண்பா)

நெஞ்சுரம் நேர்மையோடு நேர்க்கோட்டில் நின்றெழுதி
வஞ்சமதை வேரறுக்கும் வர்க்கமது- அஞ்சா
கருத்தியல்பைக் கொண்டக் கவிஞன் முகமே
நெருப்பில் தெரியும் நிலவு.


ஆகஸ்ட் 01, 2011

நன்கொடை





அமிழ்தத்தில் சரியளவு
நச்சுக் கலந்து
அருந்தியவன் நிலையில்
அருந்தமிழ் இன்று.


வெகுசன ஊடகமாம்
தமிழ்த்திரை உலகில்
பல்லி விழுந்த
பாலைப் போல
பாடல்கள் பல.

வீரியத் தமிழில்
கலப்படம் செய்து
வியாபாரம் செய்யும்
கவி மேதாவிகளே!

உங்களின்
கலப்படத்தால்

காயப்படப் போவது
மொழி மட்டுமல்ல - நம்

இனமும்தான்.
ஏனெனில் “மொழி”
இனத்தின் அடையாளம்.

மொழியில் கலப்படம்
மொழிவளர்ச்சிக்கு வேகத்தடை!

கலப்படம் தவிர்த்தலே
மொழிக்குச் செய்யும் நன்கொடை!!
Related Posts with Thumbnails