ஜூலை 24, 2013

புல்லாங்குழல்

நகர்ந்துகொண்டே இருப்பது
காலம் மட்டுமல்ல- அவர்
கால்களும் தான்.

அந்த வட்டாரத்தில்
எந்த திருவிழாவிலும்
அவரை பார்க்கலாம்.

ஒரு மரக்கழியிலேயே
தொங்குகின்றன- அவரின்
மொத்த மூலதனமும்.
அவை...
ஊசலாடியப்படியே இருக்கும்
அவர் வருனாமத்தை போல.
ஆனால்...
அறுந்து விழுவதே இல்லை
அவர் தன்மானத்தை போல.

ஒட்டிய கன்னம்
உட்குழி கண்கள்
வறண்ட உதடு
வற்றிய வயிறு
தேய்ந்த பாதம்
காய்ந்த கைகள்- என
வாழ்க்கை இவருக்குள்
வாசிப்பதென்னவோ...
சோகசுரம்தான்.
ஆனால்,
இவர் விற்பதென்னவோ
புல்லாங்குழல்கள்.



.

8 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இனிமையை விற்பவனுக்கு வாழ்கையில் இனிமை இல்லை இல்லையா ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு முரண்...!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

விற்பவன் வாழ்வு ஏழ்மை என்பதை அற்புதமாக காட்டுகிறது உங்கள் வரிகள்..

Seeni சொன்னது…

vethanaithaan sako...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இனிமையை விற்பவனுக்கு கிடைத்தது கசப்பு வாழ்க்கை! அருமையான படைப்பு வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Visit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html

படைப்பாளி சொன்னது…

அருமையான வரிகள்..இயல்பை இயல்பாய் சொல்லி இருக்கிறீர்கள்

Related Posts with Thumbnails