ஜனவரி 09, 2010

மரம்

மரம் ஒரு
பச்சையக் கடவுள்...
மாசுகளிலிருந்து
மனிதரை காப்பதால் .
மரம் ஒரு
நிச்சயக் கடவுள் ...
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் .

மரம் ...
கடும் நச்சு காற்றை
வடிக்கட்டும் தாவரம்.
மனிதா ...
மரம் வளர்த்து
நாளைய தலைமுறை
வாழ ... "தா"வரம் .

மண்ணுக்கும்
மரம்தான் உரம் !
மழைக்கும்
மரம்தான் வரம் !!

மனிதா ...
கோடாரியை தூர எறி!
மரம் காக்கும் ... புது
கொள்கைத் தரி !!

36 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

மனிதா ...
மரம் வளர்த்து
நாளைய தலைமுறை
வாழ ... "தா"வரம் .]]

அருமை கருணா - கருணையுடன்.

தமிழ் சொன்னது…

உங்களுக்கே உரித்தான நடையில் அற்புதமாக எழுதியுள்ளீர்கள்

கவிதை மட்டுமல்ல அதற்குத் தேர்ந்த எடுத்த படம் அருமை

வாழ்த்துகள்

பிரபாகர் சொன்னது…

சமூக அக்கறையுடன் ஒரு அழகிய கவிதை... நல்லாருக்குங்க...

பிரபாகர்.

அரங்கப்பெருமாள் சொன்னது…

//நிச்சயக் கடவுள் ...
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் .//

என்ன நாத்திகம் பேசுறீங்க.

ஒவ்வொருவரும் உணர வேண்டியக் கருத்து.

துபாய் ராஜா சொன்னது…

காலத்திற்கு தேவையான கவிதை.

வார்த்தை விளையாட்டு அருமை.

புத்தாண்டின் முதல் க'விதையே' முத்தான க'விதை'.

வாழ்த்துக்கள் நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
மனிதா ...
மரம் வளர்த்து
நாளைய தலைமுறை
வாழ ... "தா"வரம் .]]

அருமை கருணா - கருணையுடன்.//

மிக்க நன்றிங்க... ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
உங்களுக்கே உரித்தான நடையில் அற்புதமாக எழுதியுள்ளீர்கள்

கவிதை மட்டுமல்ல அதற்குத் தேர்ந்த எடுத்த படம் அருமை

வாழ்த்துகள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க திகழ்.

அன்புடன் நான் சொன்னது…

பிரபாகர் கூறியது...
சமூக அக்கறையுடன் ஒரு அழகிய கவிதை... நல்லாருக்குங்க...

பிரபாகர்.//

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க பிரபாகர்.

Paleo God சொன்னது…

மனிதா ...
மரம் வளர்த்து
நாளைய தலைமுறை
வாழ ... "தா"வரம் .]]//

கலக்கிட்டீங்க நன்பரே..அதிலும் அந்த பச்குசை நிற எழுத்து அழகு..:))

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
//நிச்சயக் கடவுள் ...
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் .//

என்ன நாத்திகம் பேசுறீங்க.

ஒவ்வொருவரும் உணர வேண்டியக் கருத்து.//

சும்மா ஒரு கோர்வையா வந்துட்டது.... ஏதும் கோர்த்து விட்டுடாதிங்க...மற்றப்படி நான்.... இறை பற்று உள்ளவனே!
வருகைக்கு மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
காலத்திற்கு தேவையான கவிதை.

வார்த்தை விளையாட்டு அருமை.

புத்தாண்டின் முதல் க'விதையே' முத்தான க'விதை'.

வாழ்த்துக்கள் நண்பரே.//

தங்களின் தொடர் வருகைக்கும்... வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க துபாய் ராசா.

அன்புடன் நான் சொன்னது…

பலா பட்டறை கூறியது...
மனிதா ...
மரம் வளர்த்து
நாளைய தலைமுறை
வாழ ... "தா"வரம் .]]//

கலக்கிட்டீங்க நன்பரே..அதிலும் அந்த பச்குசை நிற எழுத்து அழகு..:))//

மரத்தை பற்றி எழுதுகிறோம் பச்சை நிறத்தில் இருக்கட்டுமே என்று நினைத்து எழுதினேன்...தங்களின் ரசிப்பு திறனுக்கு..எனது நன்றிங்க.

ஹேமா சொன்னது…

சமூக அக்கறையோடு நல்ல கவிதை அரசு.மனித மரமண்டைக்குள் ஏறினால் சரி.

அரசு எங்கே காணோம்.புத்தாண்டுக் கொண்டாட்டமா !

க.பாலாசி சொன்னது…

நல்ல சிந்தனைக்கவிதை...

வசந்தி சொன்னது…

நல்ல சமுதாய சிந்தனை உள்ள கவிதை.......
உங்களுக்கும் எனது தோழி ரஞ்சனிக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
சமூக அக்கறையோடு நல்ல கவிதை அரசு.மனித மரமண்டைக்குள் ஏறினால் சரி.

அரசு எங்கே காணோம்.புத்தாண்டுக் கொண்டாட்டமா !//

வருகைக்கு மிக்க நன்றி.
கொஞ்சம் வேலை அதான்... இந்த இடைவேளை.

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
நல்ல சிந்தனைக்கவிதை...//

வருகைக்கு மிக்க நன்றிங்க பாலாசி

அன்புடன் நான் சொன்னது…

வசந்தி கூறியது...
நல்ல சமுதாய சிந்தனை உள்ள கவிதை.......
உங்களுக்கும் எனது தோழி ரஞ்சனிக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றி வசந்தி. இருவரும் நலம். உங்களுக்கும் பொங்கள் வாழ்த்துக்கள்.

கமலேஷ் சொன்னது…

சமூக அக்கறை கொண்டுள்ள மிக நல்ல கவிதை...நன்றாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

ஒரு பக்கம் மரக் கன்றுகளை நடுகிறோம். மறு பக்கம் பல ஆண்டுகள் வாழ்ந்த மரங்களைக் கொல்கிறோம். என்னதான் மனித வசதிக்க்காகனு காரணம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை இந்தத் தாவரக் கொலையை. ஒரு சிலரேனும் உணர்ந்தால் நலம் கவிதை சிறப்பு.

விஜய் சொன்னது…

மிக அவசிய புவி விழிப்புர்ணர்வு ஊட்டக்கூடிய கவிதை

அவசியம் என்னது மற்றொரு வலைப்பதிவை பாருங்கள்

http://agasool.blogspot.com/2010/01/blog-post.html

சோதிடம் சொல்லியாவது மரம் வளர்ப்பார்களா பார்ப்போம்

விஜய்

பா.ராஜாராம் சொன்னது…

பச்சையம் நிறைந்த பார்வை கருணா.

புலவன் புலிகேசி சொன்னது…

//மாசுகளிலிருந்து
மனிதரை காப்பதால் .
மரம் ஒரு
நிச்சயக் கடவுள் ...
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் .//

உண்மை தல..இத வெட்டி புட்டு கோவில் கட்டுறாங்க...

பெயரில்லா சொன்னது…

//மரம் ஒரு
நிச்சயக் கடவுள் ...
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் //

எத்தனை நிதர்சணமான உண்மை...மரம் வளர்போம் வளம் சேர்ப்போம்..

அன்புடன் நான் சொன்னது…

கமலேஷ் கூறியது...
சமூக அக்கறை கொண்டுள்ள மிக நல்ல கவிதை...நன்றாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க கமலேஷ்

அன்புடன் நான் சொன்னது…

நாய்க்குட்டி மனசு கூறியது...
ஒரு பக்கம் மரக் கன்றுகளை நடுகிறோம். மறு பக்கம் பல ஆண்டுகள் வாழ்ந்த மரங்களைக் கொல்கிறோம். என்னதான் மனித வசதிக்க்காகனு காரணம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை இந்தத் தாவரக் கொலையை. ஒரு சிலரேனும் உணர்ந்தால் நலம் கவிதை சிறப்பு.//

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.... தொடர்ந்து வாங்க.

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
மிக அவசிய புவி விழிப்புர்ணர்வு ஊட்டக்கூடிய கவிதை

அவசியம் என்னது மற்றொரு வலைப்பதிவை பாருங்கள்

http://agasool.blogspot.com/2010/01/blog-post.html

சோதிடம் சொல்லியாவது மரம் வளர்ப்பார்களா பார்ப்போம்

விஜய்//

தங்களின் புதிய பக்கத்திற்கு வாழ்த்துக்கள்....வருகிறேன்.... வருகைக்கு நன்றிங்க விஜய்.

அன்புடன் நான் சொன்னது…

பா.ராஜாராம் கூறியது...
பச்சையம் நிறைந்த பார்வை கருணா.//

தங்களின் வாழ்த்துக்கு நன்றிங்க பாரா

அன்புடன் நான் சொன்னது…

புலவன் புலிகேசி கூறியது...
//மாசுகளிலிருந்து
மனிதரை காப்பதால் .
மரம் ஒரு
நிச்சயக் கடவுள் ...
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் .//

உண்மை தல..இத வெட்டி புட்டு கோவில் கட்டுறாங்க...//

வருகைக்கு மிக்க நன்றிங்க புலிகேசி.

அன்புடன் நான் சொன்னது…

தமிழரசி கூறியது...
//மரம் ஒரு
நிச்சயக் கடவுள் ...
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் //

எத்தனை நிதர்சணமான உண்மை...மரம் வளர்போம் வளம் சேர்ப்போம்..//

தங்களின் கருத்துக்கும்... எண்ணத்திற்கும் மிக்க நன்றிங்க தமிழ்.

rvelkannan சொன்னது…

புவி வெப்படைதல் குறித்த உங்களின் கவிதை சிலிர்க்க வைக்கிறது தோழர்.
இடையில் வெகு நாட்கள் காணோமே தோழர்

சத்ரியன் சொன்னது…

கவிதையில் கருணாகரசு பளிச்சிடுகிறார்.

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
புவி வெப்படைதல் குறித்த உங்களின் கவிதை சிலிர்க்க வைக்கிறது தோழர்.
இடையில் வெகு நாட்கள் காணோமே தோழர்//

வருகைக்கு நன்றிங்க தோழர்..... கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள்... தொடர்ந்து வருகிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
கவிதையில் கருணாகரசு பளிச்சிடுகிறார்.//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

புலவன் புலிகேசி சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

தமிழ் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள்

Related Posts with Thumbnails