ஜூன் 03, 2014

வெட்கம்


கன்றுக்கே கொஞ்சம்தான்
கறப்பதெல்லாம் உங்களுக்கே.

பாலாக மாறிய உதிரத்தை
பருகுகின்றீர் ...
பரவாயில்லை என்
உதிரம் உங்கள்
உயிர் காக்கிறது.

மர அட்டைகளால்
பனையளவு நிற்கும்
நடிகனின் உருவத்திற்கு
குடங்குடமாய்
என் வெள்ளை இரத்தம்!

கொம்பு இருந்தென்னப் பயன்
வெட்கப்படுகிறேன்.

இந்தச்
சொரனை அற்றவர்களுக்கு
எருமை என்று
என் பெயர் சூட்டாதீர்கள்
அவர்கள்
வெட்கங்கெட்டவர்கள்!

(31-05 2014 ல் கவிமாலையில் பரிசுப் பெற்ற என் கவிதை)

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிக அருமையான கவிதை! பாராட்டுக்கள்!

ராஜி சொன்னது…

அவர்கள்
வெட்கங்கெட்டவர்கள்!
>>
நிஜம்தான்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பரிசு பெற்றதற்குப் பாராட்டுக்கள்.

Related Posts with Thumbnails