பிப்ரவரி 14, 2015

காதல் தின்றவன் - 37



என் 
பரந்த மனப்பரப்பை
பற்றாக்குறையாக்கி விடுகிறது,
உன்
அடர்ந்த காதல்.

நவம்பர் 30, 2014

விதி விலக்கு



இப்போதெல்லாம்
தலைக்குனிவு வாழ்வுதான்.

காத்திருப்பில்

பயணத்தில்
நடக்கையில் மட்டுமல்ல
உண்ணும் போது
உரையாடும் போதென
உறங்கும் நேரந்தவிர்த்து
ஒவ்வோரு பொழுதும்...
தலைக்குனிவு வாழ்வுதான்!

மாற்றாக

எங்கேனும் எவரேனும்
தலைநிமிர்ந்து
தன்னைச் சுற்றிய
உலகை ரசிக்கலாம்...
தொடுதிரைப் பேசியை
தொடாத மனிதராய்!.

அக்டோபர் 17, 2014

காதல் தின்றவன் - 30


நீயும் நானும்
பேசிக்கொள்ளும் சொற்களிலிருந்தே
தனக்கான,
கவிதையை எழுதிக்கொள்கிறது
இந்தக் காதல்.

செப்டம்பர் 16, 2014

காலப்பெட்டகம்


காலப்பெட்டகம் – 
ஒவ்வோரு பக்கமாக
புரட்ட புரட்ட…
என்னை கவ்வி இழுத்தது
கால சூழ்ச்சி.
அன்றைய பொழுதுகளின்
மகிழ்ச்சி இழைகளை
கோத்து தடித்திருந்தது
அந்த கால பெட்டகம்!
நஞ்சுண்டு
தற்கொலை செய்துகொண்ட
ராதாகிருஷ்ணன்
மொய்விபரங்களை சேகரித்தபடி…
மகிழ்ச்சி முகம் காட்டுகிறான்.
ஒருவர்பின் ஒருவராக
இறந்து போன
கிட்டிணன் அப்பாவும்
சின்னம்மாவும்
எங்களை வாழ்த்தும்
பெருமிதத்தோடு
அனைவாய் நிற்கிறார்கள்.
சேலையால்
தூக்கு போட்டுகொண்ட
திருச்சங்கு பொண்டாட்டி
கைக்குழந்தையோடு
ஏதோ சிரிப்பில்
மணவறை கடக்கிறார்.
மாலையை எடுத்து
வேண்டி கும்பிட்டு
எங்களுக்கு போடுகின்ற
தாலாச்சி ஆச்சியும்
இன்று இல்லை.
திருநீறு பூசிவிட்டு
வாழ்த்திச் சிரிக்கின்ற
குழுமூர் மாமாவிற்கு
தலைதிவசம் அடுத்த வாரமாம்.
விபத்தில் சிக்கி
அஞ்சலி பதாகையில்
சிரிக்கின்ற தேனப்பன் மகன்
தொரராசு
வாழ்த்துமடல் கொடுக்கும்
களிப்பில்…
என்றேனும் யாராவது
மகிழ்ச்சியின்
இழைகள் கோத்த
தடித்த காலபெட்டகத்தை
புரட்டி புரட்டி
காலச் சூழ்ச்சியில் மிரளலாம்
நம் முகங்கள் கண்டும்
http://singaporecliche.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95/#comment-128

ஜூலை 27, 2014

இணைக்கோடுகள்

இணைக்கோடுகள்.
ஆக்கிரமிப்பு வெள்ளத்தினால்
அடித்துச் செல்லப்பட்டு
கரை ஒதுங்கியவர்கள்...
இந்த நிற்கதியற்றவர்கள்.
இவர்கள்,
நிற்கும்போது விழுகின்ற
நிழல்கூட இன்னோரு தேசத்தில்தான்.
காற்றைத்தவிர
கையிற்கெட்டுவதில்லை எதுவும்.
கேள்விக்குறிகளாய் வாழும்
ஆச்சரியக்குறிகளும் இவர்களே!
தாக்கவரும் எரிகணைகளை
இவர்கள்...
கற்களை வீசி எதிர்க்கின்ற
காட்சியை கண்டேன்.
எரிகணையின் பலமும்
இவர்களின் நம்பிக்கையும்
ஏற்றத்தாழ்வுகளற்ற...
இணைக்கோடுகள்தான் எனக்கு.
Related Posts with Thumbnails