| Tweet |
அக்டோபர் 17, 2014
செப்டம்பர் 16, 2014
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம் –
ஒவ்வோரு பக்கமாக
புரட்ட புரட்ட…
என்னை கவ்வி இழுத்தது
கால சூழ்ச்சி.
புரட்ட புரட்ட…
என்னை கவ்வி இழுத்தது
கால சூழ்ச்சி.
அன்றைய பொழுதுகளின்
மகிழ்ச்சி இழைகளை
கோத்து தடித்திருந்தது
அந்த கால பெட்டகம்!
மகிழ்ச்சி இழைகளை
கோத்து தடித்திருந்தது
அந்த கால பெட்டகம்!
நஞ்சுண்டு
தற்கொலை செய்துகொண்ட
ராதாகிருஷ்ணன்
மொய்விபரங்களை சேகரித்தபடி…
மகிழ்ச்சி முகம் காட்டுகிறான்.
தற்கொலை செய்துகொண்ட
ராதாகிருஷ்ணன்
மொய்விபரங்களை சேகரித்தபடி…
மகிழ்ச்சி முகம் காட்டுகிறான்.
ஒருவர்பின் ஒருவராக
இறந்து போன
கிட்டிணன் அப்பாவும்
சின்னம்மாவும்
எங்களை வாழ்த்தும்
பெருமிதத்தோடு
அனைவாய் நிற்கிறார்கள்.
இறந்து போன
கிட்டிணன் அப்பாவும்
சின்னம்மாவும்
எங்களை வாழ்த்தும்
பெருமிதத்தோடு
அனைவாய் நிற்கிறார்கள்.
சேலையால்
தூக்கு போட்டுகொண்ட
திருச்சங்கு பொண்டாட்டி
கைக்குழந்தையோடு
ஏதோ சிரிப்பில்
மணவறை கடக்கிறார்.
தூக்கு போட்டுகொண்ட
திருச்சங்கு பொண்டாட்டி
கைக்குழந்தையோடு
ஏதோ சிரிப்பில்
மணவறை கடக்கிறார்.
மாலையை எடுத்து
வேண்டி கும்பிட்டு
எங்களுக்கு போடுகின்ற
தாலாச்சி ஆச்சியும்
இன்று இல்லை.
வேண்டி கும்பிட்டு
எங்களுக்கு போடுகின்ற
தாலாச்சி ஆச்சியும்
இன்று இல்லை.
திருநீறு பூசிவிட்டு
வாழ்த்திச் சிரிக்கின்ற
குழுமூர் மாமாவிற்கு
தலைதிவசம் அடுத்த வாரமாம்.
வாழ்த்திச் சிரிக்கின்ற
குழுமூர் மாமாவிற்கு
தலைதிவசம் அடுத்த வாரமாம்.
விபத்தில் சிக்கி
அஞ்சலி பதாகையில்
சிரிக்கின்ற தேனப்பன் மகன்
தொரராசு
வாழ்த்துமடல் கொடுக்கும்
களிப்பில்…
அஞ்சலி பதாகையில்
சிரிக்கின்ற தேனப்பன் மகன்
தொரராசு
வாழ்த்துமடல் கொடுக்கும்
களிப்பில்…
என்றேனும் யாராவது
மகிழ்ச்சியின்
இழைகள் கோத்த
தடித்த காலபெட்டகத்தை
புரட்டி புரட்டி
காலச் சூழ்ச்சியில் மிரளலாம்
நம் முகங்கள் கண்டும்
மகிழ்ச்சியின்
இழைகள் கோத்த
தடித்த காலபெட்டகத்தை
புரட்டி புரட்டி
காலச் சூழ்ச்சியில் மிரளலாம்
நம் முகங்கள் கண்டும்
http://singaporecliche.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95/#comment-128
| Tweet |
ஜூலை 27, 2014
இணைக்கோடுகள்
இணைக்கோடுகள்.
ஆக்கிரமிப்பு வெள்ளத்தினால்
அடித்துச் செல்லப்பட்டு
கரை ஒதுங்கியவர்கள்...
இந்த நிற்கதியற்றவர்கள்.
அடித்துச் செல்லப்பட்டு
கரை ஒதுங்கியவர்கள்...
இந்த நிற்கதியற்றவர்கள்.
இவர்கள்,
நிற்கும்போது விழுகின்ற
நிழல்கூட இன்னோரு தேசத்தில்தான்.
நிற்கும்போது விழுகின்ற
நிழல்கூட இன்னோரு தேசத்தில்தான்.
காற்றைத்தவிர
கையிற்கெட்டுவதில்லை எதுவும்.
கையிற்கெட்டுவதில்லை எதுவும்.
கேள்விக்குறிகளாய் வாழும்
ஆச்சரியக்குறிகளும் இவர்களே!
ஆச்சரியக்குறிகளும் இவர்களே!
தாக்கவரும் எரிகணைகளை
இவர்கள்...
கற்களை வீசி எதிர்க்கின்ற
காட்சியை கண்டேன்.
இவர்கள்...
கற்களை வீசி எதிர்க்கின்ற
காட்சியை கண்டேன்.
எரிகணையின் பலமும்
இவர்களின் நம்பிக்கையும்
ஏற்றத்தாழ்வுகளற்ற...
இணைக்கோடுகள்தான் எனக்கு.
இவர்களின் நம்பிக்கையும்
ஏற்றத்தாழ்வுகளற்ற...
இணைக்கோடுகள்தான் எனக்கு.
| Tweet |
வகை:
எரிகணை,
கவிதை,
கற்கள்,
காஸா,
சி.கருணாகரசு,
பாலஸ்த்தீன்
1 கருத்துரை(கள்)
ஜூன் 03, 2014
வெட்கம்
கன்றுக்கே கொஞ்சம்தான்
கறப்பதெல்லாம் உங்களுக்கே.
பாலாக மாறிய உதிரத்தை
பருகுகின்றீர் ...
பரவாயில்லை என்
உதிரம் உங்கள்
உயிர் காக்கிறது.
மர அட்டைகளால்
பனையளவு நிற்கும்
நடிகனின் உருவத்திற்கு
குடங்குடமாய்
என் வெள்ளை இரத்தம்!
கொம்பு இருந்தென்னப் பயன்
வெட்கப்படுகிறேன்.
இந்தச்
சொரனை அற்றவர்களுக்கு
எருமை என்று
என் பெயர் சூட்டாதீர்கள்
அவர்கள்
வெட்கங்கெட்டவர்கள்!
(31-05 2014 ல் கவிமாலையில் பரிசுப் பெற்ற என் கவிதை)
| Tweet |
வகை:
அன்புடன் நான்,
எருமை,
சி.கருணாகரசு,
சொரனை,
பால்,
வெட்கம்
3
கருத்துரை(கள்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)

