ஏப்ரல் 30, 2010

மே தினம்

கொண்டாடப்பட்டது ...
வியர்வைக்கான
அங்கீகாரமாய் .

கொண்டாடப்படுகிறது ...
விடுமுறைக்கான
அலங்காரமாய் !

மே தினம் !

ஏப்ரல் 23, 2010

(சிங்கை) பதிவர்களுக்கு அழைப்பு


இனிய சிங்கை பதிவர்களே .....
தமிழ் மொழி மாத நிறைவு நிகழ்ச்சியாகிய பொங்கு தமிழ் விழாவில் ......நானும் எனது நண்பர்களும் படைக்கும் கவிதை பட்டிமன்றத்துக்கு அன்புடன் அழைக்கின்றேன்.
நாள் : 25.04.2010.......ஞாயிறு
நேரம் : மாலை 6:30 க்கு சரியாக
இடம் : உமறு புலவர் தமிழ் மொழி நிலையம் (இரண்டாம் தளம் )
508, விக்டோரியா தெரு (லாவண்டர் எம்.ஆர்.டி அருகில் )
அனைவரும் வருக

ஏப்ரல் 19, 2010

தாயே திரும்பி போ!

தாயே திரும்பிப் போ !

இது ,
பாதகர்கள் உலவும்
பாவ மண் ...._ இதில் உன்
பாதம் வேண்டாம் !.

தாயே திரும்பிப் போ !!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்

மார்ச் 06, 2010

நட்பு

நானும் அவனும்
நகமும் சதையும்
நான் நகம்
அவன் சதை .
வெட்டிவிட்டான் ...
நான் வளர்வதால் !


குறிப்பு ....
(படத்திற்கும் கவிதைக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை )
(கவிதை வாரமலரிலும் .... பின் எனது "தேடலைச் சுவாசி" நூலிலும்...இடம் பெற்றக் கவிதை )

மார்ச் 03, 2010

நாகரிகம்



துணிக்கடை பொம்மை

சேலையில் !

தொடைத்தெரிய உடுத்தியவள்

சாலையில் !

வெட்கப்பட்டது பொம்மை _இது

நாகரிக உலகின் உண்மை .

(இது ஒரு மீள் பதிவுங்க )

Related Posts with Thumbnails