உகந்த நாயகன் குடிக்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உகந்த நாயகன் குடிக்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மே 20, 2016

காதல் தின்றவன் - 34



உனக்கான காத்திருத்தலில்
தூரம் எதுவானாலும்
உன் வருகையை
அறிந்துக் கொள்கிறது,
நீ வராத தருணத்தில்
அரிந்துக் கொல்கிறது.

மார்ச் 20, 2016

சிட்டுக்குருவி


அழிவின் விளிம்பிலென
அங்காலிப்பதெல்லாம் அப்புறம்!
அஞ்சாறு நொய்யரிசியை
வீசுங்கள் முதலில்.

ஜூலை 13, 2015

காதல் தின்றவன் - 27

நம் 
காதலுக்கான
தேசிய கொண்டாட்டம்
உன் பிறந்த நாள்.

மே 04, 2015

வறண்ட குளம்


எங்க ஊர் குளம்

தாகமெடுத்த குளமிது
தற்கொலைச் செய்து கொண்டது.

கரை உடைத்த நீரெங்கே

கரை வளர்த்த மரமெங்கே
தாமரை போர்வை எங்கே- அவைத்
தரும் வாச பூக்களெங்கே.

குளமே...

உன்னில் மூழ்கி
உயிர்விட்ட வரலாறு அன்று
உன்னுயிரே மூழ்கிய 
வரலாறாய் இன்று.

தாகச்சுமையோடு இனி

பறவைகள் எப்படி
சிறகடிக்கும்?

மண்ணைக் குடியென்று

பழக்குவதெப்படி 
மாடு ஆடுகளை?

குடமுடைத்து வருபவன் 

இனிதலை முழுகுவது எப்படி?

தடாகமே... 

உன்தற்கொலைக்கான
தடையம் தேடும்
தருணம் இதுவல்ல.
உயிர்த்தெழு... எம்
உயிர் நனைக்கவும் 
உடல் துவைக்கவும்.


#கவிதை : சி.கருணாகரசு
படம்: தி.தமிழருவி.
இடம் : உகந்த நாயகன் குடிக்காடு

மார்ச் 10, 2014

காதல் தின்றவன் - 49


உன்மீதான
காதலை புதைத்தேன்.
அது
கவிதையாய் முளைக்கிறது.

நவம்பர் 12, 2013

காதல் தின்றவன் - 45

பெருங்காடு அழிந்தபின்
வெறிச்சோடிய நிலப்பரப்பாய்
மனதை வெறுமையாக்கிவிடுகிறது,
உன்
சிறு பிரிவு.

செப்டம்பர் 20, 2013

காதல் தின்றவன் -40



கோபித்து சென்றுவிட்டாய்.

நெருப்புக் கட்டிகளை
நெஞ்சில் சுமக்கிறேன்,

நீ வந்தனை.

செப்டம்பர் 10, 2013

காதல் தின்றவன் - 21

உனதான பாதி
எனக்கும்,
எனதான பாதி
உனக்குமானதில்
நமதாகிப் போனது காதல்.


ஆகஸ்ட் 21, 2013

காதல் தின்றவன் - 41


சொல்பேச்சி கேட்காமல்
மழையில் நனைகிறாய்,
இன்று
எதைநான் போர்த்திக்கொள்ள?

ஆகஸ்ட் 08, 2013

காதல் தின்றவன் -38



உன்னை
அணர்த்தும் வலியோடு
அழைத்துச் சென்று
அறைக்கதவை சாத்தினார்கள்.
பிள்ளைச் சத்ததிற்கு பின்னும்
கடும்வலி சுமந்தபடி
காத்து கிடக்கிறேன்
கதவோரம் - உன்
காதல் தின்றவன்.

ஜூலை 30, 2013

காதல் தின்றவன் - 39



வித்தியாசம் ஏதுமில்லை
பொம்மைக்கேட்டு
அடம்பிடிக்கும் குழந்தைக்கும்,
உன்னைக்கேட்டு 
அடம்பிடிக்கும் என் மனதிற்கும்.

ஜூலை 24, 2013

புல்லாங்குழல்

நகர்ந்துகொண்டே இருப்பது
காலம் மட்டுமல்ல- அவர்
கால்களும் தான்.

அந்த வட்டாரத்தில்
எந்த திருவிழாவிலும்
அவரை பார்க்கலாம்.

ஒரு மரக்கழியிலேயே
தொங்குகின்றன- அவரின்
மொத்த மூலதனமும்.
அவை...
ஊசலாடியப்படியே இருக்கும்
அவர் வருனாமத்தை போல.
ஆனால்...
அறுந்து விழுவதே இல்லை
அவர் தன்மானத்தை போல.

ஒட்டிய கன்னம்
உட்குழி கண்கள்
வறண்ட உதடு
வற்றிய வயிறு
தேய்ந்த பாதம்
காய்ந்த கைகள்- என
வாழ்க்கை இவருக்குள்
வாசிப்பதென்னவோ...
சோகசுரம்தான்.
ஆனால்,
இவர் விற்பதென்னவோ
புல்லாங்குழல்கள்.



.

ஜூலை 12, 2013

காதல் தின்றவன் - 35



நீ
தோழிகளோடு
கதைத்தபடி செல்கிறாய்,
நான்
கவிதைகள் பொறுக்கியபடி
உன்னை தொடர்கிறேன்.

மே 22, 2013

காதல் தின்றவன் - 25



புயல் தாக்கிய
கடலோர மாவட்டமாய்
ஒழுங்கற்று கிடக்கிறது
உன்னைக் காணா மனசு.

டிசம்பர் 14, 2012

காதல் தின்றவன் -06

                          
என்னதான் ...
தின்றுகொண்டே இருந்தாலும்
தீர்ந்தபாடில்லை ...
நம் காதல்.

நவம்பர் 30, 2012

காதல் தின்றவன் - 04

மஞ்சள் பூசிக் குளி
என்கிறாள் அம்மா,
உன்னைப் பூசிக் குளிப்பேன்
என்கிறது மஞ்சள்.


நவம்பர் 12, 2012

காதல் தின்றவன் -02

ஒற்றுப் பிழையால்கூட
அழகாகிவிடுகிறது
ஓர்க் கவிதை!
உன் 
தெத்துபல் போல.

அக்டோபர் 31, 2012

உன் முகம்


நீ
இமைகளுக்கு
மை தீட்டி கொள்கிறாய்,
கண்ணாடி 
தன்னை 
ஒப்பனை செய்துகொள்கிறது.

மே 28, 2012

விடியல்


விடியலுக்கு என்று 
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.

தகிக்கும் வெயிலில்
வேகும் மனதிற்கு
தென்றலாய் அமையும்,
நிம்மதிக்கு பெயர் விடியலே.

அடர்ந்த வாழ்வில்
காற்றோட்டமாய் அமையும்
பொழுதுகள் அத்தனையிலும்
விடியல்கள்,
திளைக்கும் கிளைக்கும்.

அந்திக்குப் பின்
இருள் கவ்வும் பொழுதுகூட
நட்சத்திரங்களுக்கான
விடியல்தான்.

விடியலுக்கு என்று
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.


நவம்பர் 10, 2011

வாழ்ந்த நாட்கள்!

வணக்கம்...,

சிலகாலமாக வலைத்தளம் வர இயலவில்லை... நட்பின் துணையோடு சில பதிவுகளை வலையேற்றினேன்.  அதோடு கடந்த இரண்டு மாதங்களாக தாயகத்தில் குடும்பத்துடன் மகிழ்வோடு வாழ்ந்தேன்.... இனி தொடந்து வலையில் வருவேன்.

கடந்த இரண்டு மாதம் நான் வாழ்ந்த கணக்காகும்... அதற்கு சாட்சியாய் சிலபடங்கள்.


 


இனிய நன்றிகள்.



Related Posts with Thumbnails