நவம்பர் 07, 2015

விழுதுகள்

2015 செப்டம்பர் மாத கவிமாலை நிகழ்வில், விழுதுகள் என்னும் போட்டித் தலைப்பில் பரிசு பெற்ற என் கவிதை.


பொருளாதாரம்...
ஊசலாடாமல் இருக்க,
ஊசலாடிக் கொண்டிருக்கிறான்
உயரத்தில்.

கட்டடத்தின்...

கண்ணாடி உடலை
அழகாக்குகின்றான்... தன்னை
அழுக்காக்கிக் கொண்டு.


உயரத்தில் தொங்குகின்றவனுக்கு
உறுதுணையாகவும்
ஒரே துணையாகவும் இருப்பது,

உச்சியிலிருந்து
இவனோடு இணைக்கப்பட்டிருக்கும்
இரும்பு விழுதுகளே.


**********************************************

Related Posts with Thumbnails