மே 04, 2014

மயிலிறகு


நரை தொடங்கிய 
வாழ்வின் நடுப்பகுதியில் நாம்

உனக்கும்
குடும்பம் குழந்தைகள்.

எனக்கும்
குடும்பம் குழந்தைகள்

அன்று...
நீ கொடுத்த மயிலிறகு
இன்றும்
என் புத்தகத்தின் நடுவே.

அது
குட்டியும் போடவில்லை
செத்து போகவும் இல்லை.
Related Posts with Thumbnails