மார்ச் 23, 2011

நரைமுடி


அடர்காடாய் இருந்தாலும்
அடர்காட்டில் இருந்தாலும்
அதிசயமாய் வளரும் “பட்ட மரங்கள்”



மார்ச் 07, 2011

பெண்பாக்கள், மகளிர் தினம்

                                       


சீதை 
ஆணாதிக்கத்தால்
அக்னியில் குளித்தெழுந்த
அனிச்சம்.


திரெளபதை
ஐவர் பகிர்ந்துக் கொண்ட 
ஒற்றை இதயம்!


குந்திதேவி
கர்ணனை அனாதையாக்கி
“கன்னி”யம்! காத்தவள்.


காந்தாரி
இவளவன்
கண்கள் இரண்டால்
இவளும்
கண்கள் இருண்டாள்.


சூர்ப்பநகை
மூக்கறுப்பட்ட
முதல் காதல்!


அகலிகை
“கல்”லானாலும்
கணவன் என் கிடந்தவள்.


கண்ணகி
மதுரை ஓவியத்தை அழித்த
கற்புத் தூரிகை!


மாதவி
கணிகை குலத்தில் பிறந்த
கண்ணகி!


மணிமேகலை
கணிகை குலமும்
வணிக குலமும்
கலந்து செய்த
கடவுள் குலம்.


அமராவதி
காதல் வாசித்த
இரங்கற்பா.


கிளியோப்பாட்ரா
அரியனை யுத்தத்திற்கான
அழகு ஆயுதம்.


டயானா
ஆங்காங்கே கிழிக்கப்பட்ட
அழகியல் புத்தகம்.


அன்னை தெரசா
நிராகரிக்கப் பட்டவர்களின்
நிராகரிக்கப்படாத
கருணை மனு!


இந்திராகாந்தி
வேலியால் விழுந்த
வீரிய விருட்சம்


ஆங்சாங் சுகி அம்மையார்
உரிமைக்காக போராடும்
உயிரியல் பர்மா தேக்கு!


கிரண்பேடி
இருண்ட சிறையினுள்
புகுந்த வெளிச்சம்!


சான்சி ராணி
வல்லினம் மிரண்ட
மெல்லினம்.


ஒளவையார்
போர் முரசை தவிர்த்த
தமிழ் முரசு.


கல்பனா சாவ்லா
விண்வெளி லயித்த
கொலுசொலி!


பார்வதி (என் அம்மா)
என் 
வரங்களுக்காகவே
வாய்த்த கடவுள்!


(இவைகளில் ஏதேனும் தவறாக பொருள் தந்தால் குறிப்பிடவும் திருத்திக்கொள்ளலாம்)



மார்ச் 01, 2011

புதிய பார்வை




எழுத்துக்கள் பெரிதாக்க படத்தின் மேல் அழுத்தவும்.

நன்றி

Related Posts with Thumbnails