ஜூலை 28, 2010

கர்ப்பிணி

உருவான நாள்முதல்
உருமாற்றம்
உனக்கும்...
உனக்குள்ளும் !

கணபொழுதையும்
கவனத்தால் நிரப்புகிறாய் !
கருவறை தேவைகளை
கவனித்து நிரப்புகிறாய் !!

ஆட்கொள்ளும்
அவ்வபோது ...
உடல் களைப்பு !
அது உனக்கு
அணுவெல்லாம்
உயிர் களிப்பு !!

உபாதைகள் உனக்குள்ளே
உயிரறுக்கும் !_ நீ
வயிர்த்தடவும் உவகையால்
அதுமறக்கும் !!

பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!






என் இல்லத்தரசிக்கு......

ஜூலை 22, 2010

மனம்


உடலின் எதனுள் மறைந்து வசிக்கிறாய்
உன்னை அறியத் துடித்தேன் !
இடமா, வலமா இருப்பது எங்கே ?
என்றுநான் தேடிக் களைத்தேன்

இதயமா, மூளையா நீயெது என்றே
எனக்குள் குழம்பித் தவித்தேன் !
அதிசய முத்தாய் அகமெனும் சிப்பியில்
ஆனதைக் கண்டு பிடித்தேன்

மனிதனை ஆளும் மகத்துவ சக்தி
மனமே இதுவரை நீயே !
எனினும் சிலரில் மிருக வெறியை
ஏற்றி வைப்பதால் தீயே!!

எல்லா உயிரிலும் அன்பதைத் தூவி
எங்கும் அமைதி பரப்பு !
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!


( இக்கவிதை 2003 மார்ச்சில் கவிமாலையில் பரிசு பெற்றது .... எனது "தேடலைச் சுவாசி " நூலிலும் இடம்பெற்றது ,
கவிதை சமநிலைச் சிந்து என்னும் மரபில் இயற்றப்பட்டது .... குறையிருப்பின் சுட்டவும் )

ஜூலை 18, 2010

கவிஞர் நேரம் , விருமாண்டி, (வானொலியில் நான் )

வணக்கம் ,
சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 ல்.... விருமாண்டி படப்பாடலைப் பற்றிய எனது கண்ணோட்டம்.
இதுகவிஞர் நேரம்நிகழ்ச்சிக்காக ஒலியேறிய படைப்பு. ( பாடலுடன் )

படம் :விருமாண்டி
பாடல் :உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல
பாடலாசிரியர்: திரு கமலகாசன்
படைப்பு :சி.கருணாகரசு.

ஜூலை 09, 2010

கவியரசருக்கு கவிதாஞ்சலி , (காணொளியில் நான்)

நடிகர் திரு சிவக்குமார், எழுத்தாளர்க் கழகத் தலைவர் திரு நா.ஆண்டியப்பன் ...நான்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழகம் 2008 ஆம் ஆண்டு நடத்திய "கவியரசு கண்ணதாசன் விழா"வில் ...." கவியரசருக்கு கவிதாஞ்சலி " நிகழ்வில் நான் பாடிய கவிதாஞ்சலியை காண "இங்கே"
சொடுக்கவும் .... (http://www.youtube.com/watch?v=YBR-4Ewf828)


Related Posts with Thumbnails