பிப்ரவரி 16, 2012

எதிரி

                               வெண்பா

கதிராடும் நன்நிலத்தைக் காற்றாடும் காட்டைச்
சதியாடி மானிடவன் சாய்த்தான் - மதிக்கெட்டு
தாம்மட்டும் வாழத் தரணியின் சீர்கெடுக்கும்
நாம்தான் எதிரி நமக்கு.

பிப்ரவரி 05, 2012

வெளிச்சம்!


உடல் முழுதும் வலியேறி
உயிர்க் கொஞ்சம் வெளியேறி
உணர்வுப் பிழன்றத் தாயின்
இருண்டத் தருணத்தில்...
வெளிச்சமாகிறது!
சட்டெனக் கேட்கும்
பிள்ளைக் குரல்!.


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்த்தாளர்க் கழகமும் பெக்கியோ இந்திய சமூக நற்பணி மன்றமும் மாதந்தோறும்  நடத்தும் “கவிச்சோலை” நிகழ்வில்“வேதனையில் விளைந்த வெளிச்சம்” கவிதை போட்டியில் பரிசு பெற்ற என் கவிதை (04-02-2012)
Related Posts with Thumbnails