ஆகஸ்ட் 31, 2013

தங்க மீன்கள்

தங்க மீன்கள்

வெளியீட்டு அன்றே முதல் காட்சி பார்பதற்காக காத்திருந்தேன். அப்படியே நேற்று முதல் காட்சி பார்த்தேன்.

காட்சிகள் மிக துள்ளியமாக படகோர்வை செய்திருந்தார்கள். ஒவ்வோரு காட்சியும் சிறப்பாக செதுக்கப்பட்டிருந்தது. பாடல் பாடல்வரிகள் மனதை ஈர்ப்பதாய் இருந்தது. எல்லோருக்கும் அமையாத அப்பாவுக்கும் மகளுக்குமான தனி உலகம் கண்ட எனக்கு, ஒரு மகளுக்காக இப்படியான அப்பாவா வாழனும் என்கிற ஆசையை விதைத்தது.

இன்றைய கல்விச்சூழலை காட்டிய விதம் பாராட்டுதலுக்கு உரியது. ஆடம்பர பள்ளிகளின் தார்மீகச்சுழல், பண்ணை நடத்துவது கதையோடு பின்னப்பட்ட விதம் மிக நேர்த்தி.

எப்படா பள்ளிவிடும், விட்டால் போதும் என மகிழ்ச்சியோடு பிள்ளைகள் வெளியே ஓடிவந்தால் அது பள்ளிகளின் கோளாறு என புரிய வைத்தது.

எந்த தருணத்திலும் பிள்ளைகளை கொண்டாடுங்கள் என கற்றுதரும் படம்.

கதைக்கான அனைவரும் மிக பொருத்தம்... இதில் தனித்து சொல்வதற்கல்ல... கொஞ்சமும் சாயம்பூசாத இயல்பு.

பெரிய திரையில் காணும்போது கூடுதல் பிரமிப்பை உணரலாம். அருவாள், தொப்புள், இரத்தம், சத்தம்..... இல்லாத மன நிறைவை தந்த படமுங்க... .

அனைவருக்கும் பாராட்டுகள்.

திரு ராம் அவர்களின் கல்வெட்டு இது. “தங்க மீன்கள்” மனமெங்கும் நீந்துகின்றன.

அன்புடன் நான்,
சி.கருணாகரசு.

ஆகஸ்ட் 21, 2013

காதல் தின்றவன் - 41


சொல்பேச்சி கேட்காமல்
மழையில் நனைகிறாய்,
இன்று
எதைநான் போர்த்திக்கொள்ள?

ஆகஸ்ட் 14, 2013

காதல் தின்றவன் -33


ஒரு பெருமழைக்குப் பின்
பச்சை பிடித்துக்கொள்ளும்
மானாவரி நிலமாய்,
உன் வருகைக்குப் பின்
என் உயிர்.

ஆகஸ்ட் 08, 2013

காதல் தின்றவன் -38



உன்னை
அணர்த்தும் வலியோடு
அழைத்துச் சென்று
அறைக்கதவை சாத்தினார்கள்.
பிள்ளைச் சத்ததிற்கு பின்னும்
கடும்வலி சுமந்தபடி
காத்து கிடக்கிறேன்
கதவோரம் - உன்
காதல் தின்றவன்.
Related Posts with Thumbnails