தாரத்தின்... தாய்மை !
வகை: கவிதை , சி.கருணாகரசு , தாரத்தின்...தாய்மை
கவிதாஞ்சலி (முத்துக்குமார்)
வகை: அஞ்சலி , ஈழம் , கவிதை , சி.கருணாகரசு , முத்துக்குமார்
வட்டிக் கடன்
தற்காலிகத் தீர்வென வந்து
தன்மானத்தை சிதைக்கும் !
எக்காலும் அவன் வாழ்வை
ஏறவிடாமல் வதைக்கும் !!
வளருமந்த வட்டிமட்டும்
வானளவு தழைக்கும் !_அதில்
வாங்கியவன் தினம்வாட
வாழ்க்கை எங்கே பிழைக்கும் ?
வட்டி ...
உணர்வை கொன்றுவிடும் !
சிலநேரம் ...
உயிரை கூட தின்றுவிடும் !!
இது ,
நிம்மதிக்கு பகை !
என்றும் ...
நெருடுகின்ற வகை !!
மனிதா ...
வட்டிகடன் வாங்காமல்
வாழ்க்கை நடத்த கற்கணும் !
இல்லையேல் ...
வாழ்வாதாரம் இழந்துபோய்
வாழ்வில் விளிம்பில் நிற்கணும் !!
வகை: கவிதை , சி.கருணாகரசு , வட்டி , வட்டிக் கடன்
மரம்
மரம் ஒரு
பச்சையக் கடவுள்...
மாசுகளிலிருந்து
மனிதரை காப்பதால் .
மரம் ஒரு
நிச்சயக் கடவுள் ...
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் .
மரம் ...
கடும் நச்சு காற்றை
வடிக்கட்டும் தாவரம்.
மனிதா ...
மரம் வளர்த்து
நாளைய தலைமுறை
வாழ ... "தா"வரம் .
மண்ணுக்கும்
மரம்தான் உரம் !
மழைக்கும்
மரம்தான் வரம் !!
மனிதா ...
கோடாரியை தூர எறி!
மரம் காக்கும் ... புது
கொள்கைத் தரி !!
வகை: கவிதை , சி.கருணாகரசு , மரம்
வழிப்பறி
பட்டப் பகலில்
விழியை ஆயுதமாக்கி
என் இதயத்தை
பறித்துச் சென்றாள்.
அவளின் ...
அடையாளங்கள் ,
செந்நிற மேனி
சிவந்த உதடு
மஞ்சள் தாவணி
மயக்கும் விழிகள்
கால் சலங்கையோ ...
கவிதையின் சந்தம் !
தகவல்
தரவேண்டிய முகவரி ...
இதயத்தை இழந்தவன் ,
கவிதை இல்லம் ,
காதல் தெரு ,
அஞ்சல் எண் 237.
( எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து )
வகை: கவிதை , காதல் , சி.கருணாகரசு , தேடலைச்சுவாசி , வழிப்பறி
காமுக (ஆ)சாமி!!!
கடவுள் வாழும்
கருவறையில் ...
கற்பூரத்தைக்
கொளுத்தும் ... பூசாரி
கற்பை கொளுத்தியதாய்
காணோளிச் செய்தி !!!
இப்போதுதான்
இடம் மாறுகிறது
என் கோபம்
பூசாரி மீதிருந்து ...
கடவுளுக்கு !
( கவிமலையின் இம்மாத "இடம் விட்டு இடம் " தலைப்புக்கான போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை )
வகை: இடம் விட்டு இடம் , கவிதை , கவிமாலை , காமுக (ஆ)சாமி , கோபம் , சி.கருணாகரசு
வரதட்சணை
மங்கை ஒருத்தி மூலம்
மகனையே விலைப்பேசும்
மானங்கெட்ட வித்தை !
(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து )
வகை: கவிதை , சி.கருணாகரசு , தேடலைச்சுவாசி , வரதட்சணை







