
அ = அம்மா... என்னைச் சுமந்த
உயிர்க் கடவுள்.
ஆ = ஆசை ... குழந்தை குங்குமப்பூ
இ = இந்தியா ... பகையோடு கூட்டு சேர்ந்து ,
சொந்தகாரர்களை கொன்ற நாடு.
ஈ = ஈகத்தில் வியந்தது ... நாட்டுக்காக
உயிராயுதமாய் மாறிய ஈழத்தமிழன் .
உ = உண்மையானது ... என் மனைவியின்
அன்பும் நட்பும் காதலும் .
ஊ = ஊரறிந்த ரகசியம் ... கலைஞர் ...
தாத்தாவின் உண்ணாவிரதம் .
எ = எதிர்ப்பது ... விளைநிலங்களை
விலைநிலங்களாக மாறுவதை .
ஏ = ஏற்பது ... தன்மானத்திற்கு
இழுக்கில்லா எதையும் .
ஐ = ஐந்தினையில் பிடித்தது ...
"முல்லை ".
ஒ = ஒலியில் சிறந்தது ... என்
கிராமத்து தாவணிச் சிட்டுகளின்
மருதாணி காலில் கொஞ்சும் கொலுசொலி .
ஓ= ஓட்டு எனப்படுவது ... விரலிலும்
மக்கள் விடியலிலும் கறைப்படிந்த கருப்பு .
ஒள = ஒளவ்வபோது நினைவுக்குள் ...
கம்பிச் சிறைக்குள் கரையும் தமிழினம் .
ஃ =ஃ இன் வலிமை ... உயிர்மெய் உருவாக்கத்திற்கான
உயிர் "மெய் ".
அழைத்தவர்களுக்கு நட்புடன் ஜமால் , சத்ரியன்
நன்றி
நான் அழைப்பது : கண்ணன் , மற்றும் பா. ரா ,
மற்றவரெல்லாம் எழுதிவிட்டதால் ...
அடுத்தவர் தொடரலாம் .... நன்றி வணக்கம் ...
அன்புடன் நான் சி.கருணாகரசு .