ஆகஸ்ட் 07, 2009

பொதுவுடைமைப் படைப்பாளி


கழனியிலே...
பொதுவான உழைப்பாளி,
கவிதையிலே...
பொதுவுடைமைப் படைப்பாளி.
*
தன்மனதை...
கருப்பாகக் கொண்டவர்,
தன்மானத்தை...
இரும்பாகி நின்றவர்.
*
கவிஞர்...
இளமையிலே...
இறந்து போனவர்.
ஆனால்,
இமயமாய்...
இருந்து போனவர்.
*
*
( சிங்கப்பூரில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கலை இலக்கிய விழா 2009 க்கான, கழனிக்கவி மலருக்கான என் கவிதை)

4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

இறந்தும் வாழ்பவர்கள் இவர்கள்.

சி.கருணாகரசு சொன்னது…

//இறந்தும் வாழ்பவர்கள் இவர்கள்.//


ஆம் ஹேமா,
இறந்தும் சிலர் வாழ்வார்கள்... படைப்பினால் சிலர்,
படையினால் சிலர்!.

Kala சொன்னது…

‘இமயமாய் இன்றும் மனங்களில்
இருப்பவர்’அவர் மறைந்தாலும்
அவர் கவிகள் பண்ணுடன்
தமிழ் மண்ணின் பெருமையுடன்
கமழ்கிறதல்லவா நல்ல கவிதை

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க கவிஞி கலா அவர்களே.

Related Posts with Thumbnails