செல்லமே...!
எனக்கும் உனக்கும்
உடன்பாடு ஏதுமின்றியே ...
உற்ற துணையானோம் .
*
*
உனக்கு என் மீதும்
எனக்கு உன் மீதும்
ஏற்பட்ட பிடிப்பிற்கு
அன்பே ஆதாரம்.
*
*
என் முகம் காண
நீ மகிழ்வாய்
என் அரவணைப்பில்
நீ நெகிழ்வாய் ,
உன்னை ...
வாரியணைத்து
வாஞ்சையோடு கொஞ்சுவது
வழக்கம் எனக்கு .
*
*
எனக்காக காத்திருப்பதும்
என்னையே சுற்றிவருவதும்
உன் வாடிக்கை ,
உன் அருகாமையையும்
உன் தொடுதலையும்
விரும்புவது ... என் வாடிக்கை .
*
*
காலச் சூழல்
கடல் கடந்து வந்துவிட்டேன் ...
உன் பிரிவுத் துயரோடு .
என் பிரிவும்
உன்னை வாட்டலாம் .
... இருந்தும் கேட்கிறேன்
மனதளவில் இல்லாவிட்டாலும்
உடலளவிலாவது ...
நலமா ?
நன்றியுணர்வுள்ள ... என்
நாலுகால் செல்லமே ...!
(நான்கு ஆண்டுகள் முன்... என்மீது அன்போடு இருந்த நாய்க்குட்டியை பிரிந்து வெளிநாடு வந்த போது எழுதிய கவிதை .
இன்று அந்த குட்டி இல்லை ... ஆகையால் இந்த கவிதை என் நாய்க்குட்டிக்கு .... காணிக்கை . உண்மை படம் கிடைக்கவில்லை )