ஜூலை 27, 2014

இணைக்கோடுகள்

இணைக்கோடுகள்.
ஆக்கிரமிப்பு வெள்ளத்தினால்
அடித்துச் செல்லப்பட்டு
கரை ஒதுங்கியவர்கள்...
இந்த நிற்கதியற்றவர்கள்.
இவர்கள்,
நிற்கும்போது விழுகின்ற
நிழல்கூட இன்னோரு தேசத்தில்தான்.
காற்றைத்தவிர
கையிற்கெட்டுவதில்லை எதுவும்.
கேள்விக்குறிகளாய் வாழும்
ஆச்சரியக்குறிகளும் இவர்களே!
தாக்கவரும் எரிகணைகளை
இவர்கள்...
கற்களை வீசி எதிர்க்கின்ற
காட்சியை கண்டேன்.
எரிகணையின் பலமும்
இவர்களின் நம்பிக்கையும்
ஏற்றத்தாழ்வுகளற்ற...
இணைக்கோடுகள்தான் எனக்கு.

1 கருத்து:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

Related Posts with Thumbnails